தினம் ஐந்து திருக்குறள்





TNPSC GROUP 1 & GROUP 2 MAINS PREPARATION MODEL QUESTION & ANSWERS 28 January 2021 07:00AM



1. அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல் » பொருள்





41 . கல்லாமை (பொருட்பால்)


41 . கல்லாமை

(பொருட்பால்)

 

1. அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்

» பொருள்



விளக்கம் : நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்

Couplet :
Like those at draughts would play without the chequered square,
Men void of ample lore would counsels of the learned share


Explanation : To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares

Transliteration : Arangindri Vattaati Yatre NirampiyaNoolindrik Kotti Kolal

 
கலைஞர் உரை: நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.

 
மு.வ உரை:அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.

 
சாலமன் பாப்பையா உரை:அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம்.
 
 

2. கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று

» பொருள்



விளக்கம் : கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது

Couplet :
Like those who doat on hoyden's undeveloped charms are they,
Of learning void, who eagerly their power of words display


Explanation : The desire of the unlearned to speak (in an assembly), is like a woman without breasts desiring (the enjoyment of ) woman-hood

Transliteration : Kallaadhaan Sorkaa Murudhal MulaiyirantumIllaadhaal Penkaamur Ratru

 
கலைஞர் உரை: கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.

 
மு.வ உரை:எண் (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.

 
சாலமன் பாப்பையா உரை:படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்.
 
 
 

3. கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்

» பொருள்



விளக்கம் : கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்

Couplet :
The blockheads, too, may men of worth appear,
If they can keep from speaking where the learned hear


Explanation : The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned

Transliteration : Kallaa Thavarum Naninallar KatraarmunSollaa Thirukkap Perin

 
கலைஞர் உரை: கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.

 
மு.வ உரை:கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.

 
சாலமன் பாப்பையா உரை:கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.
 
 
 

4. கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்
கொள்ளார் அறிவுடை யார்

» பொருள்



விளக்கம் : கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்

Couplet :
From blockheads' lips, when words of wisdom glibly flow,
The wise receive them not, though good they seem to show


Explanation : Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge

Transliteration : Kallaadhaan Otpam Kazhiyanan RaayinumKollaar Arivutai Yaar

 
கலைஞர் உரை: கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

 
மு.வ உரை:கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

 
சாலமன் பாப்பையா உரை:படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து
 
 

5. கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்

» பொருள்



விளக்கம் : கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்

Couplet :
As worthless shows the worth of man unlearned,
When council meets, by words he speaks discerned


Explanation : 51 The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of

Transliteration : Kallaa Oruvan Thakaimai ThalaippeydhuSollaatach Chorvu Patum

 
கலைஞர் உரை: கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.

 
மு.வ உரை:கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்.

 
சாலமன் பாப்பையா உரை:படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து