GK (வரலாறு)- முகலாயப் பேரரசு
GS - INDIAN HISTORY - Mughal Empire





Mughals Notes for Tnpsc Group 1 2 2a 4 & VAO, Tnusrb, SI, RRB, Mughals Notes, Mughals notes in tamill,முகலாயர்கள்



Free Study Materials for Tnspc in Tamil & English





முகலாயப் பேரரசு

பாபர் (1526-1530)

  • இவரின் தந்தை துருக்கியைச் சார்ந்த தைமூர் பரம்பரையையும், தாயார் மங்கோலிய இனத்தைச் சார்ந்த செங்கிஸ்தான் பரம்பரையையும் சார்ந்தவர்கள். இவரது குடும்பம் துருக்கிய இனமான சாக்டாய் பிரிவைச் சார்ந்தது. இவர்கள் பொதுவாக முகலாயர்கள் எனப்பட்டனர்.

  • பாபர் என்ற பெயருக்கு சிங்கம் என்பது பொருள்

  • ஏப்ரல் 21 1526 ல் நடந்த முதல் பானிபட்ட போரில் இப்ராஹிம் லோடியைத் தோற்கடித்தார்.

  • கி.பி.1527ல் நடந்த கண்வா போரில் சங்க்ராம் சிங் தோற்கடித்தார்.

  • 1528ல் நடந்த சந்தேரி போரில் ராஜபுத்திர மன்னரான மேதினிராயைச் தோற்கடித்தார்.

  • 1529 ல் நடந்த கோக்ரா போரில் இப்ராஹிம் லோடியின் சகோதரரான முகமது லோடியைத் தோற்கடித்தார்.

  • இந்தியாவில் துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் இவரே.

  • ரோஜா செடியை அறிமுகப்படுத்தியவர்.

  • பாபரின் சுயசரிதை : பாபர் நாமா ( துருக்கி மொழி)


ஹீமாயூன் :

  • பாபருக்கு பின் ஹீமாயூன் ஆட்சிக்கு வந்தார்

  • இவர் டெல்லியில் தீன்பானாவைக் கட்டினார்

  • சேௗசா போர் ( 1539) மற்றும் கன்னோசி போர் (1540) ஆகிய போர்களில ஷெர்ஷா என்ற ஆப்கானியரால் தோற்கடிக்கப்பட்டு நாடு இழந்தார்.

  • நாட்டை இழந்த ஹீமாயூன் இரான் அரசரின் உதவியுடன் நாட்டை மீட்டார்.

  • மாடி படியில் இருந்து விழுந்து உயிர் இழந்தார்.


ஆப்கானிய குறுக்கீடு :

ஷெர்ஷா சூர் (1540-1545)

  • கி.பி 1540 ல் ஹீமாயூன் வெளியேறிய பின் இவர் டெல்லி தலைவரானார்.

  • அக்பரின் முன்னோடி என அழைக்கப்படுகிறார்.

  • வெள்ளி நாணயங்களை அறிமுகம் செய்தார்.

  • 1544ல் சாமேலில் மார்வாரின் ராஜபுத்திரப்படைகளைத் தோற்கடித்தார்.

  • ஷெர்ஷா நிரந்தரத் தபால் முறையை அறிமுகப்படுத்தினார். அவர் நிரந்தர எடை மற்றும் அளவுகளைக் கொண்டு வர முயற்சித்தார்.

  • சில்வர்'ரூபியா' தாமிர 'தாம்' ஆகிய நாணங்களை அறிமுகப்படுத்தி பழைய கலப்பு உலோக நாணயங்களை ஒழித்தார்.

  • ஷெர்ஷா ‘நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்பட்டார் .


அக்பர்-முகலாயப் பேரரசு (தொடர்ச்சி) :

  • ஹீமாயூன் நாட்டை இழந்து தவித்தபோது அமரக் கோட்டையில் அக்பர் பிறந்தார்.

  • தந்தை - ஹீமாயூன் தாய் - அமீதா பேகம்

  • பாதுகாப்பாளர் - பைராம்கான்

  • ஹீமாயூன் இறந்ததும் பட்டம் சூட்டிக் கொண்டு சுமார் 49 ஆண்டுகாலம் ஆட்சி செய்தார் .

  • இரண்டாம் பானிபட் போர் 1555 : நவம்பர் 5ம் தேரி டில்லியை ஆட்சி செய்த ஹெமுவிற்கும் அக்பருக்கும் நடந்தது. இதுவே பானிபட் பேராட எனப்படும். இதில் அக்பர் வெற்றி பெற்றார். பைராம்கான் இவ்வெற்றிக்கு காரணமாவார்.

  • 1550ல் பைராம்கான் விடுவிக்கப்பட்டார். 1561ல் ஆப்கானியர்களால் இவர் கொல்லப்பட்டார்.

  • 1561ல் மாளவம் கைப்பற்றப்பட்டது. மன்னர் பாஜ் பகதூர் சரணடைந்தார்.

  • 1552ல் ஆம்பர் (ஜெய்பூர்) ராசா பிகாரிமால் தோல்வியடைந்தார். அவரது மகள் ஜோத் பாயை அக்பர் திருமணம் செய்து கொண்டார். பிகாரி மால் மகன் பகவான் தாஸ் ஆவார். அவருடைய பேரன் மான் சிங் ஆவார்.

  • 1586ல் அக்பர் காஷ்மீரையும், 1593ல் சிந்துவையும் கைப்பற்றினார். அவரது கடைசி வெற்றி - அசிர்கார்கோட்டை - தக்காணத்தில் உள்ளது.

  • 1572ல் அக்பர் ஷேக் சலீம் சிஸ்தி என்ற சுபி துறவியின் மீது பற்றுக்கொண்ட காரணத்தால் அவரது நினைவாக பதேபூர் சிக்ரி (ஆக்ரா அருகில்) எனற் இடத்தை கட்டினார்.

  • 1576ல் ஹல்திகாட் சண்டை அக்பருக்கும் இராணா பிரதாப் சிங்கிற்கும் நடைபெற்றது. அக்பரின் சார்பாக இராஜா மான்சிங் போரிட்டார். அதில் இராணா பிரதாப் சிங் மரணமடைந்தார்.

  • இராஜா மான்சிங் பீகார், ஓரிசா மற்றும் வங்காளத்தை கைப்பற்றினார்.

  • அகமது நகரை ஆண்ட சந்த்பீவி உடன் உடன்படிக்கை 1596ல் ஏற்படுத்தப்பட்டது, அகமது நகர் கைப்பற்றப்பட்டது.

  • அக்பரின் கடைசி படையெடுப்பு தக்காணத்தில் உள் அசிகார் கோட்டையை கைப்பற்றியது ஆகும். தக்காணத்தின் விலைமையான கோட்டை அசீர்கார்க் ஆகும். இதை அக்பர் வஞ்சகமான முறையில் கைப்பற்றினார்.

  • அக்பர் இராசபுத்திரர்களின் திருமண உறவின் மூலம் பெரும் பலன் அடைந்தார். 1584ல் தமது மகன் சலீமுக்கு இராஜா பகவான் தாஸ் மகளை திருமணம் செய்து வைத்தார்.


அக்பரின் நிர்வாகம் :

  • முகலாயர்களின் வருவாய் நிருவாகத்தை தோற்றுவித்தவர் அக்பர் ஆவார்.

  • சுராசரி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு வரி விதிக்கப்பட்டது.

  • வருவாய் துறை அமைச்சர்: ராசா தோடர்மால்

  • அக்பரின் வரி வசூல் முறையின் பெயர்: சப்தி முறை

  • இராணுவ அமைச்சர்: ராசா மான்சிங்

  • அக்பரின் இராணுவ முறைக்கு மன்சப்தாரி முறை என்று பெயர் 1577ல் இது அறிமுகப்படுத்தப்பட்டது.

  • மான்ச்தாரி வரிசை முறைக்கு ணுயுவு என்று பெயர் குதிரைக்கு சூடு போடும் முறை உண்டு.

  • புனிதப் பயணிகள் மீது விதிக்கப்பட்டிருந்த ஜெஸியா வரியை 1562ல் ரத்து செய்தார். மாட்டிறைச்சியின் உபயோகம் தடைசெய்யப்பட்டது.

  • அக்பர் விதவை மறுமணத்தை ஆதரித்தார்.

  • அக்பர் சதி என்னும் உடன்கட்டை ஏறுவதை தடுத்து நிறுத்தினார்.

  • அக்பரின் சமாதி சிக்கந்தாராவில் உள்ளது.

  • அக்பரின் அவை கவிஞர் - அப்துல் வமது

  • அக்பர் தோற்றுவித்த மதம்: தீன் இலாகி (தெய்வீக நம்பிக்கை)

  • அக்பரின் அரசவைக்கு வருகை புரிந்த முதல் ஆங்கிலேயர் ரால்கப் பிட்ச்

  • அக்பரின் நிலவரித் திட்டம் ஷெர்ஷாவின் நிலவரித்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.

  • துளசிதாசர் இராமாயணத்தை ஹிந்தியில் மொழிபெயர்த்தார்.

  • 1505 அக்டோபர் 17ல் மறைந்தார். சிகந்தரா என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.


ஜஹாங்கீர் (1505-1527) :

  • அக்பரின் மூத்த மகனான சலீமா, நூருதீன் முகமது ஜஹாங்கீர் என்னும் பட்டப்பெயருடன் அரியணை ஏறினார்.

  • ஜஹாங்கீர் - உலகை வென்றவர்

  • ஜஹாங்கீர் இளவரசி Nஐhதபாயை மணந்தார்.

  • ஜஹாங்கீர் பதவியெற்றவுடன் ஆக்ரா-அரண்மனைக்கு வெளியே நீதி சங்கிலி நிறுவப்பட்டது.

  • ஐந்தாவது சீக்கிய குருவான குரு அர்ஜீன் தேவ்: தூக்கிலிடப்பட்டார்.

  • மெஹருன்னிஷாவிற்கு முதலில் நூர்மகால் என்று பெயரிடப்பட்டது. ஆனால் 1616 ல் நூர்ஜஹான் உலகத்தின் ஒளி என்று பெயர் மாற்றம் செய்தார்.

  • 1611ல் அவர் ஷெர் ஆப்கானியின் இறப்பிற்குப் பின் அவரது விதவையான அவரது மனைவி மெஹருன்னிஷாவை ஜஹாங்கீர் மணந்தார்.

  • இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வணிகம் செய்ய அனுமதி வழங்கிய முதல் இந்திய மன்னர் ஜஹாங்கீர் ஆவார் .

  • புகழ்பெற்ற பீட்ரா வில்லே என்னும் இத்தாலியப் பயணி இவர் காலத்தில் வருகை புரிந்தார்.

  • இவரது காலத்தில் போர்ச்சுக்கீசியரால் 1508 ல் கொண்டுவரப்பட்ட புகையிலை பயிரிடப்பட்டது.

  • 1527ல் ஜஹாங்கீர் மறைந்தார்.


ஷாஜஹான் (1628-1658) :

  • ஜஹாங்கீருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்.

  • கட்டடக் கலையில் அதிக ஆர்வம் காட்டியதால் அவர் பொறியாளர் அரசர் என்றும் கட்டடக்கலையின் இளவரசர் என்றும் அழைக்கப்படுகிறார்.

  • ஷாஜஹான் -உலகின் அரசர் என பொருள்படும்.

  • தனது மூத்த மகன் தூராவை தனது வாரிசாக நியமித்தார். ஆனால் ஔரங்சீப் தர்மத் மற்றும் சாமுகர் போரின் வெற்றியின் மூலம் அரசப் பதவியைக் கைப்பற்றினார்.

  • தன் அன்பு மனைவி மும்தாஐக்காக 22 ஆண்டுகள் முயன்று கட்டியதே உலக அதிசயங்களில் ஒன்றான தாமகால்.

  • மும்தாஜின் இயற்பெயர்: அர்ஜீமான் பானுபேகம்

  • தாஜமகாலை வடிவமைத்தவர்: உஸ்தாத் இசா

  • இவர் ஷாஜஹானாபாத் என்ற புதிய அழகிய தலைநகரை உருவாக்கினார்.

  • இவரது ஆட்சி முகலாயர்களின் பொற்காலம் எனப்படுகிறது. இரண்டு பிரஞ்சுக்காரர்களான பெர்னியர், டாவெர்னியர் மற்றும் இத்தாலியர் மனூச்சி ஆகியோர் இவரது அவைக்கு வந்தனர்.


ரங்க சீப் (1658-1707) :

  • இயற்பெயா:; ஆலம் கீர்

  • 9 வது சீக்கிய குருவான தேஜ் பகதூர் ஒளரங்கசீப்பால் கொலை செய்யப் பட்டார்.

  • இசை கலையை தடை செய்தார்.

  • முத்து மசூதி பிபி-கா- மக்பாரா ஆகிய கட்டடங்களை கட்டினார்.

  • ஐசியர் வரியை மீண்டும் இந்துக்கள் மீது விதித்தார்.

  • ஒளரங்கசீப்பின் வரலாறு: ஆலம் கீர் நாமா (மிர்சா முகமது காசிம் ஆல் எழுதப்பட்டது)

  • இவரை உயிர் வாழும் புனிதர் என்று பாராட்டியுள்ளனார்.


பத்தார்ஷா (1707-1712):

  • இவர் ஷா ஆலம் என்னும் பட்டம் பெற்றார். ஷா-இபெகாபர் எனவும் அழைக்கப்பட்டார்.


ஜஹங்தர் ஷா (1712-1713):

  • முதலாவது பொம்மை முகலாய அரசர் இவர். இவர் ஜெஸியா வரியை ரத்து செய்தார்.


பருக்ஷியார் (1713-1719).


முகமது ஷா (1719-48)

  • நாதிர்ஷா இவரை கர்னால் போரில் தோற்கடித்தார்.

  • மயிலாசனம் மற்றும் கோஹினூர் வைரத்தை எடுத்துச் சென்றார். இவரது ஆட்சியின் போது சின்-கிளிச் கான் ஹைதராபாத்தையும் முர்ஷித் குலி கான் வங்காளத்தையும் நிறுவினார். சாதத் கான் அயோத்திற்கு அடித்தளத்தை உருவாக்கினார்.


அஹமது ஷா (1748-54):

  • இவருடைய ஆட்சியின் போது அயோத்தியில் நவாப் சப்தர்ஷங் பேரரசின் பிரதம மந்திரியானார்.


ஆலம்கீர் (1754-59)


ஷா ஆலம் (1759-1806) பக்ஷார் போர்


முய்னுதின் அக்பர் ஐஐ.(1806-37) :

  • ராம்மோகனுக்கு ராஜா என்னும் பட்டம் வழங்கினார்.

  • இவர் ராஜாராம் மோகன்ராயை ஆங்கிலேயரிடமிருந்து பெறும் தனது உதவித்தொகையை அதிகரித்துக்கொடுக்க லண்டனுக்கு அனுப்பினார்.


சிராஜீதீன் பகதூர்ஷா (1837-57) :

  • இவரே கடைசி முகலாய மன்னர்.

  • 1857 ல் முதல் சுதந்திரப் போரில் பரட்சிக்காரர்களால் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.

  • இவர் 1857 புரட்சியின் போது கலகத்தில் ஈடுபட்டவர்களை ஆதரித்ததால் ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார்.